வண்ணத்துப்பூச்சிகள் அழியக்கூடிய நிலையில் இருக்கின்றன. இதற்கு காரணம் மக்கள் எல்லா பொருட்களையும் வியாபார நோக்குடன் பார்க்கிறார்கள். அழகை ரசிப்பதில்லை. அதற்கு தேவையான பாதுகாப்பு, பராமரிப்பு அளிப்பதில்லை. தேவையான உணவைக் கொடுக்க மறுக்கிறார்கள்.
வண்ணத்துப்பூச்சிகளை விளையாட்டு பொருள்களாகவும் தேவையற்ற ஒரு பூச்சியாகவும் நினைக்கிறார்கள். விவசாயிகள் அவற்றை தன் எதிரிகளாக எண்ணுகிறார்கள். அவற்றை அளிக்க சிந்திக்கிறார்கள் தவிர அதன் இனப் பெருக்கத்திற்கு உதவுவதில்லை. அரசாங்கம் கூட தற்போது "பெட்ரோல் ", எண்ணெயின் மதிப்பை உணர்கிறார்கள். ஆனால் கடவுள் படைத்த ஓர் உயிருள்ள அழகிய பொருள் உலகில் விட்டு மறைந்து விடுகிறதே என்று அவர்கள் கவலைப்படுவதில்லை.
நான் வண்ணத்துப்பூச்சிகளைக் காப்பாற்ற நினைக்கிறேன். அதன் அழகிய வதனம், நிறப் பொருத்தம், சுறுசுறுப்பு மக்களின் மனதை அமைதிப்படுத்துகிறது. அவற்றை நான் பாதுகாப்பான இடத்தில் பராமரித்து தேவையான உணவு வகைகளைக் கொடுப்பேன். அதற்கு சரியான வெப்பநிலையைக் கொடுத்து எதிரிகளிடமிருந்து காப்பாற்றி அதன் இனப்பெருக்கத்திற்கு உதவி செய்வேன். அவற்றின் நிலைமையை உலக செய்திகள் அறிவிக்கும் வண்ணம் நான் பாடுப்படுவேன். அழகை அழிப்பது பாவமன்றோ?
ஷேரன்
வெஸ்ட் வியூ தொடக்கப் பள்ளி
3H
Wednesday, August 27, 2008
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment