Thursday, August 28, 2008


நானும் கவிஞன் ஆவேன்!

எங்கள் ஆசிரியை எங்களுக்கு ஒரு ஒப்படைப்பைக் கொடுத்தார். அதை நாங்கள் விருப்பத்துடன் செய்தோம். காரணம், அந்த ஒப்படைப்பின் முலம் நாங்கள் தப்லேட் பிசி (tablet pc) என்று அழைக்கப்படும் மடி கணினியைப் பயன்படுத்தினோம்.

அந்த ஒப்படைப்பு ஒரு இணைய இலக்கு வடிவில் அமைந்திருந்தது. நாங்கள் முதலில் கவிதை என்றால் என்ன என்பதை அறிந்தோம். கவிதை பல ஆண்டுகளுக்கு முன் தோன்றியது. நம் இந்திய புராணங்களான மஹாபாரதமும் இராமாயணமும் கவிதை வடிவில் தான் தோன்றின. நாளடைவில் அவை மக்கள் புரிந்துக்கொள்ளும் வகையில் கதைகளாக எழுதப்பட்டன. நாங்கள் இவ்வொப்படைப்பில் கவிதை எழுதுவதோடு ஆர்ட் ரேஜ் ( Art Rage )என்ற மென்பொருளைப் பயன்படுத்தி எங்கள் கவிதைகளுக்கு ஏற்ப படங்கள் வரைந்தோம். அதை நாங்கள் ஒரு பெட்டியில் ஒட்டி, விசித்திரப் பெட்டி ஒன்றை உருவாக்கினோம்.
இதோ நான் எழுதிய ஒரு கவிதையும் அதற்கேற்ப நான் வரைந்த ஓவியமும்.

கடலே கடலே
ஆழமான கடலே
மீன்கள் வாழும் கடலே
பெரிய பெரிய கடலே
நீல நிறக் கடலே
எல்லோரும் விரும்புகிறக் கடலே
அழகிய கடலே
ஷேரன் பெலிண்டா பெகரன்
வெஸ்ட் வியூ தொடக்கப் பள்ளி
மூன்றாம் வகுப்பு

No comments: