Wednesday, September 17, 2008

என் பெற்றோர்.......


தெரியாத பாடத்தை கற்றுக் கொடுப்பார் என் தாய்,

நான் செய்யும் தவறுகளைக் கண்டிப்பார் என் தந்தை,

கேட்டதைத் தட்டாமல் கொடுப்பார்கள் இருவரும்,

இவர்களே என் அன்பு பெற்றோர்கள்!


அஷ்விந்தர்

5B

பட்டம் பார்!


பட்டம் ஆகாயத்தில் பறக்கும். அது பல வண்ணங்களில் இருக்கும். பட்டத்திற்கு அழகிய வாழ் உண்டு. கடற்கரையில் பட்டம் விடலாம். என்னுடைய அழகான பட்டம் பார்.


சுவேதா

1A

என்னைப் பற்றி .................

என் பெயர் ஷரேணி. எனக்கு ஆறு வயது ஆகிறது. எனக்கு ஒரு தம்பியும் ஒரு தங்கையும் இருக்கிறார்கள். நான் ஒன்றாம் வகுப்பில் படிக்கிறேன். நான் பள்ளி முடிந்ததும் விட்டிற்கு சென்று என் பாடங்களைச் செய்வேன். என் அம்மா எனக்கு சொல்லிக் கொடுப்பார். எனக்கு புத்தகங்கள் படிக்க பிடிக்கும். நான் என் தங்கையுடன் சிறிது நேரம் விளையாடுவேன். என் தங்கை என்னகு தமிழ் பாடம் சொல்லித் தருவார்.

ஷரேணி
1C

கதை கதையாம் காரணமாம்!!!!!!!


இந்த கதை உனக்கு பிடித்திருக்கிறதா?

- ஆமாம்! இந்த கதை மிகவும் வித்தியாசமாக இருந்தது. அது மட்டும் இல்லாமல் கதையின் முடிவு மிகவும் வேடிக்கையாக இருந்தது.


இந்த கதையில் உன்னைக் கவர்ந்தவர் யார்?

-இந்த கதையில் என்னை கவர்ந்தவர் சரவணன். அவன் முட்டாளாக இருந்ததால் அவனின் வார்த்தைகள் மிகவும் வேடிக்கையாக இருந்தது.


இந்த கதையில் நான் கற்ற மூன்று புதிய சொற்கள்:

- துரதிஷ்டவசமாக

-போதித்தார்

-அனுதாபம்


அன்புள்ள சரவணன்


நீ நலமாக இருக்கிறாயா? நான் நலமாக இருக்கிறேன். நான் உன் பிரச்சனைகளை அறிவேன். ஏன் அவர்கள் உன்னை அடித்திருப்பார்கள் என்று உனக்கு தெரியுமா? மற்றவர் மனைவியை உன் மனைவி என்று எப்படி உரிமையுடன் கூறி நீ அனுதாபம் தெரிவித்தாய்? அதனால் தான் உன்னை அடித்தார்கள். உன்னை மீண்டும் சந்திக்கிறேன்! சீக்கிமாக பதில் எழுது!


இப்படிக்கு,

லாவண்யா, ஸ்னேஹா

4G

ஆசிரியார்கள்


நல்ல நல்ல ஆசிரியார்கள்,

எங்கள் மீது அன்பு உள்ளவர்கள்,

பாடத்தோடு நல்லது சொல்லித் தருபவர்கள்,

எங்கள் கல்விக் கண்களைத் திறந்து வைப்பவர்கள், எங்களுக்காகப் பாடுப்படுபவர்கள்,

எங்கள் வெற்றிக்கு கை கொடுப்பவர்கள்,

இவர்கள் நல்ல ஆசிரியர்கள்!


கண்ணா

5F

என்னைப் பற்றி


எனக்கு மிகவும் பிடித்த பாடம் தமிழ். நான் தினமும் தமிழ் படிப்பேன். அதனால் ஏன் தமிழ் ஆர்வம் வளர்கிறது.


பாவாஸ்

1D

Tuesday, September 16, 2008

புதுக் கவிதை

திருவள்ளுவர் எழுதுயது திருக்குறள்
ஔவையார் எழுதியது ஆத்திசூடி
பாரதியார் எழுதியது கவிதை
கண்ணதாசன் எழுதியது பாடல்
கதாசிரியர் எழுதியது கதை
நான் எழுதுவது புதுக்கவிதை

வைத்தீஸ்வரி
5E

நாங்கள் படித்து விரும்பிய கதை.................


இந்த கதை உனக்கு பிடித்திருந்ததா?
ஆமாம்! ஏனென்றால் இந்த கதை நகைச்சுவையாக இருந்தது.

இந்த கதையில் உன்னை கவர்ந்தவர் யார்?
இந்த கதையில் எங்களைக் கவர்ந்தவர் பெரியவர். அவர் எல்லோரிடமும் அன்பு காட்டினார்.

இந்த கதையில் நீ கற்றுக் கொண்ட மூன்று சொற்கள்:
- அனுதாபம்
-துர்த்திஷ்தவசமாக
- சமீபித்துவிட்டு
நீ சரவணனுக்குக் கூற விரும்பும் அறிவுரை:

சரவணன்! நீ ஒன்றுமே தெரியாமல் இருக்கக் கூடாது. நீ என் விட்டுக்கு வா! நான் உனக்கு பொது அறிவு, மற்றவர்களிடம் எப்படி பேசுவது என்றெல்லாம் கற்றுக் கொடுக்கிறேன். நீ பேசும் போது சிந்தித்து பேச வேண்டும். அப்போது தான் மற்றவர்கள் உன்னை மதிப்பார்கள். சரி, நாளை என் விட்டிக்கு வா! நான் இப்போது விடைப் பெறுகிறேன்!

நன்றி
இப்படிக்கு,
முகேஷ், ரூபன்
4G & 4D

நாம் படித்து மகிழ்ந்த கதை


அரைகுறை அறிவு ஆபத்தை உண்டாக்கும்..............

இந்த கதை உன்னக்கு பிடித்திருந்ததா?
- ஆமாம்! இந்த கதையில் நல்ல கருத்து இருக்கிறது.

இந்த கதையில் உன்னை கவர்ந்தவர் யார்? ஏன்?
- இந்த கதையில் என்னை கவர்ந்தவர் சரவணன். அவன் மிகவும் நகைச்சுவையாக நடந்துக் கொண்டான்.

இந்த கதையில் நீ கற்ற மூன்று சொற்கள்:
- துர்த்திஷ்தவசமாக
- பிரமுகர்
- மணமக்களை

சரவணனுக்கு நீ எழுத விரும்பும் தகவல்:
அன்புள்ள சரவணன்,

நீ தன் தவறு செய்து விட்டாய். நீ அம்மாவையும் அப்பாவையும் தான் அல்லவா அவ்வாறு சொல்லியிருக்க முடியும். ஒன்றும் தெரியாத பிள்ளையாகவே இருக்கிறாயே. இனியாவது வாயைக் கொடுத்து மாட்டாமல் இருந்துகொள்! நீ இனிமேல் உன் பொது அறிவை வளர்த்துக் கொள்! இது தான் நான் உனக்கு கூறும் அறிவுரை.

இப்படிக்கு,
ஜென்சீ, ஸ்ரீ துர்கா
4G & 4F
சிங்கம்
இந்தோனேசியா
1798345

அன்புள்ள கொக்கு.நீங்கள் அழகு ராணி போட்டியில் வெற்றி பெற்றீர்கள். எல்லோரும் உங்களுக்கு வாழ்த்து சொல்கிறார்கள். நானும் உங்களுக்கு வாழ்த்து சொல்கிறேன். நீங்கள் அழகு ராணி போட்டியில் வெற்றி பெற்றதற்கு நான் என்ன செய்ய வேண்டும்?


நன்றி சிங்கம்

கொக்கு
சென்னை
60020

பர்வேஸ் அலி
21

சிங்கம்

மரப் பொந்து

சென்னை காடு 03456


கொக்கு, நீ எவ்வளவு அழகாக இருக்கிறாய்! ஆயினும் உன் வால் உன் உடம்பின் வண்ணத்தோடு ஒன்றாக இருந்தால் எவ்வளவு அழகாக இருக்கும். உன் வால் தான் கருப்பு நிறத்தில் உள்ளதே!


கொக்கு

மரப் பொந்து

சென்னை காடு 23457


ஐஸ்வரியா

2F

அன்புள்ள கொக்கே


யானை மிருகம்

ஆபிரிக்கா காடு

09834

அன்புள்ள கொக்கே!நீ மிகவும் அழகாக இருக்கிறாய். அழகு ராணி ஆன உன்னை பலரும் மணக்க விரும்புவர். நானும் அப்படித்தான்!


நன்றி


இப்படிக்கு யானை

கொக்கு

மும்பை காடு

02354
ச. கமலி
2J

Sunday, September 14, 2008

அழகு ராணி கொக்கே..........





குட்டி எறும்பு,
USA காடு 2085
08-09-2008
அன்புள்ள கொக்குவுக்கு,
நீ அழகு ராணியானத்தில் எனக்கு மகிழ்ச்சி. நான் உன்னை தொலைக்காட்சியில் பார்த்தேன். எத்தனை அழகி வந்திருந்தாலும் நீ தான் வெற்றி பெறுவாய் என்று நான் அப்போதே அறிந்தேன். அழகு ராணி என்பது ஒரு பெரிய பட்டம். அதனால் நீ உன் அழகை எப்போதும் வைத்திருக்க வேண்டும். இதுவே என் ஆசை. மீண்டும் மீண்டும் வாழ்த்துக்கள் கொக்கு!
இப்படிக்கு,
குட்டி எறும்பு

கொக்கு
மும்பை காடு 007
ஸ்ரீ ஆண்டாள்
2E

Tuesday, September 9, 2008

ஆசிரியர்கள் மிகவும் நல்லவர்கள்!
அவர்கள் எங்களுக்கு படிக்க உதவி செய்பவர்கள்!
ஆசிரியர்கள் அன்பானவர்கள்!
நன்றி அன்புள்ள ஆசிரியர்களே!

தேவா
4G

Monday, September 8, 2008

எனக்கு பிடித்த ஆசிரியர்......

தேன் மிகவும் இனிப்பு,
நம் மொழி மிகவும் முக்கியமானது,
இரண்டும் சேர்ந்தால் தேன்மொழி,
அவர் தான் எனக்கு மிகவும் பிடித்த ஆசிரியர்!

பாடங்கள் சொல்லித் தருவார்,
நம் பிரச்சனைகளைக் கேட்பார்,
திருமதி தேன்மொழி மிகவும் நல்ல ஆசிரியர்,
எனக்கு பிடித்த ஆசிரியர் அவர் தான்!

சினேஹா 4G

Sunday, September 7, 2008

சின்ன முயல் .........................................


சின்ன சின்ன முயலே வா!

என் சிங்கார முயலே வா!

அழகாய் குதித்து ஓடி வா!

அழகாய் காதை ஆட்டி வா!

எனக்குப் பிடித்த முயலே வா!

உனக்குப் பிடித்த காய்கறிகள் தருவேன் வா!

அழகு முயலே ஓடி வா!

என் அருமை முயலே ஓடி வா!


நான்சி பௌலின்

3C

அம்மாவின் அன்பு


இவள் பெயர் சாந்தா. இவளுக்கு மூன்று பிள்ளைகள் இருக்கிறார்கள். ஒரு நாள் சாந்தாவின் மகன் பலகாரம் சாப்பிட்டுக் கொண்டிருந்தான். அவளுடைய மகள்கள் இருவரும் அழ ஆரம்பித்தார்கள். சாந்தா அவர்களை சமாதானப் படுத்தினாள். அவர்களுக்கு சாந்தா பலகாரம் செய்ய ஆரம்பித்தாள். பிள்ளைகள் ஒற்றுமையாக பலகாரத்தைச் சாப்பிட்டார்கள்.


சங்கீதா

2E